உச்ச கட்டத்தை தொடும் இஸ்ரேல் – பலஸ்தீனப் போர்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,265 ஆக உயர்வு

Date:

இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் 10 மாதங்களுக்கும் அதிகமாக நடைபெற்று வருகின்றது.

இப் போரில் அனேகமான பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் லட்சக்கணக்கானோர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இப் போரை நிறுத்தும்படி உலக நாடுகள் வலியுறுத்தி வருவதோடு, இதற்கான நிபந்தனை அறிக்கையையும் அமெரிக்கா தயாரித்தது.

ஆனாலும் நிபந்தனைகளுக்கு இரு தரப்பினரும் இணங்குவதாக தெரியவில்லை. இன்று வரையில் போர் முடிவுக்கு வரவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, டேயிர் அல் – பாலா, கான் யூனிஸ் ஆகிய நகரங்களில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த நள்ளிரவு முதல் அங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி கடந்த 10 மாதமாக நடைபெற்று வரும் போரில் காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,265 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 93,144பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சிலாபம் மாவட்ட பொதுத் தள வைத்தியசாலையின் பாவனைக்காக அண்ட்ராய்ட்  இரத்த அழுத்தக்...

“இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே பலத்த கூட்டாளி டிரம்ப் மட்டுமே”: டிரம்ப் – ஈரான் ஒப்பந்தத்தை விமர்சிக்க வேண்டாம் என ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மேற்கொண்டுள்ள சமாதான ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக...