மாணவக் குழுக்களிடையே மோதல்: தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகம்!

Date:

இரண்டு மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் இன்று மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இன்று மாலை 6 மணிமுதல் பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூட பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 6 மணிக்குள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், குறித்த பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்!

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதன்ன...

பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...