புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கைகள் இந்தியாவின் நேச சக்திக்கு முரணாக இருக்காது: முஸ்லிம் கட்சிகள் அஜித் தோவலிடம் உத்தரவாதம்

Date:

புதிதாக உருவாக்கப்படும் சஜித் பிரேமதாசவின் அரசாங்கத்தில் தாங்கள் முக்கிய பொறுப்புக்கள் வகிப்போம் எனவும் புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கைகள் நிச்சயமாக இந்தியாவின் நேச சக்திக்கு முரணாக இருக்க மாட்டாது என இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் உத்தரவாதம் வாங்கியுள்ளனர்.

அஜித் தோவலினுடனான சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அமீர் அலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இது வரையான பிரச்சார கூட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் நிறைந்து காணப்பட்டதாகவும் தோவலிடம் கூறிய அவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 90 வீதமான முஸ்லிம்கள் சஜித் பிரமேதாசவுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...