IMF இல்லாமல் எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: மாலைதீவு வெளிவிவகார அமைச்சர்

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின்றி நாட்டின் நிதிச் சவால்களை தீர்க்க முடியும் என்று மாலைதீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் வங்கிகளுடனும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

தமது நாடு எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினைகள் தற்காலிகமானவை என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியை நாட வேண்டிய அவசியமில்லை என்றும் மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் தெரிவித்துள்ளார்.

கையிருப்பு குறைந்து வருவதால் தற்போது மாலைத்தீவு தற்காலிக சிக்கலை எதிர்கொண்டுள்ளதாகவும் வெளிப்புற நிதி தலையீடு இல்லாமல் அதைத் தீர்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் மூலோபாயத்தில் வரி முறை சீர்திருத்தம், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் செலவுகளைக் குறைத்தல், சீனா மற்றும் இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் போன்றவை உள்ளடங்கும் என வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

IMF இன் 5, 6 ஆம் மீளாய்வுகள் அடுத்த வாரத்தில்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து வரும் நிலையில்,...

200மி.மீ பலத்த மழை: அதிக மழை வீழ்ச்சி கம்பஹாவில்

கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பகுதியில் 244 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி...

முழந்தாளிட்டுக் கட்டப்பட்ட குளோபல் சுமுத் புளோட்டிலா ஆர்வலர்கள்: இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயலுக்கு இலங்கை கண்டனம்.

காசா பகுதிக்கு ஆதரவாகச் சென்ற சர்வதேச மனிதாபிமான உதவிக் கப்பல் குழுவினர்...