புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கைகள் இந்தியாவின் நேச சக்திக்கு முரணாக இருக்காது: முஸ்லிம் கட்சிகள் அஜித் தோவலிடம் உத்தரவாதம்

Date:

புதிதாக உருவாக்கப்படும் சஜித் பிரேமதாசவின் அரசாங்கத்தில் தாங்கள் முக்கிய பொறுப்புக்கள் வகிப்போம் எனவும் புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கைகள் நிச்சயமாக இந்தியாவின் நேச சக்திக்கு முரணாக இருக்க மாட்டாது என இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் உத்தரவாதம் வாங்கியுள்ளனர்.

அஜித் தோவலினுடனான சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அமீர் அலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இது வரையான பிரச்சார கூட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் நிறைந்து காணப்பட்டதாகவும் தோவலிடம் கூறிய அவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 90 வீதமான முஸ்லிம்கள் சஜித் பிரமேதாசவுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...