யாழ்ப்பாணம் – கொழும்பு தொடருந்து சேவை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Date:

கொழும்பு  கோட்டையில் இருந்து யாழ். காங்கேசன்துறை வரையான ரயில் சேவை இன்று (28) முதல் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த தகவலை பிரதி தொடருந்து பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டையில் இருந்து இன்று அதிகாலை 5.45 மணிக்கு ரயில் புறப்பட்டுள்ளதுடன், நாளை 29 ஆம் திகதி காங்கேசன்துறையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு 10.53 இற்கு யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை வந்தடைந்து 11 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும்.

வடக்கு ரயில் பாதையில் தினமும் ரயில் பயணிக்கும் என்றும், ரயில் கடவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும் ரயில் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நேர அட்டவணைக்கு அமைய, கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.05 க்கு புறப்படும் தொடருந்து பிற்பகல் 12.38 க்கு திருகோணமலையை சென்றடையும். பிற்பகல் 1.30 க்கு திருகோணமலையில் இருந்து புறப்படும் தொடருந்து இரவு 7.59 க்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும்.

கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.05 க்கு புறப்படும் ரயில்பிற்பகல் 3.15 க்கு மட்டக்களப்பை சென்றடையும். கொழும்பு கோட்டையில் இருந்து பிற்பகல் 3.15 க்கு புறப்படும் ரயில் இரவு 10.22 க்கு மட்டக்களப்பை சென்றடையும்.

மட்டக்களப்பில் இருந்து பிற்பகல் 1.40 புறப்படும் ரயில் இரவு 8.55 க்கு கொழும்பு கோட்டை ரயில்நிலையத்தை வந்தடையும்.  மட்டக்களப்பில் இருந்து இரவு 6.10 க்கு புறப்படும் ரயில் இரவு 8.55 க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...