2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்:’பாகிஸ்தானை வீழ்த்தியது போதாது; இன்னும் அபாரமாக விளையாடியிருந்தால், சற்று முன்னதாகவே வென்றிருக்கலாம்’

Date:

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட்களால் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை அடுத்து ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண அரை இறுதியில் விளையாடுவதற்கான இந்தியாவின் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய அணியின் இந்த வெற்றியில் விராத் கோஹ்லி குவித்த அபார சதமும் ஷ்ரெயாஸ் ஐயருடன் 3ஆவது விக்கெட்டில் அவர் ஏற்படுத்திய இணைப்பாட்டமும் முக்கிய பங்காற்றின.

சிறப்பாக ஆடிய விராட் கோஹ்லி 62 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்னில் அவுட்டானார்.

வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்இ கோலி பவுண்டரி அடித்து சதம் அடித்தார். இதன்மூலம், 42.3 ஓவர்களில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், பத்திரிகையாளர் சந்திப்பில் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

‘நாங்கள் சற்று முன்னதாகவே வென்றிருக்கலாம், உறுதியான வெற்றியாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார். பாகிஸ்தான் அணியின் லெக்ஸ்பின்னர் அப்ரார் அகமது 10 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்ராரின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அவரை எதிர்கொள்ளும் போது கவனமாக விளையாட வேண்டும் என்றார்.

இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தங்களின் முன்னணியை உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்த போட்டிகளில் மேலும் சிறந்து விளையாடும் நோக்கத்தில் அணியின் வீரர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்த முயற்சித்துள்ளனர்.

ஏற்கனவே, வங்கதேசப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடர்ந்து 2 வெற்றிகளை பதிவு செய்ததால்,  அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
அதேவேளையில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...