உடுநுவர, மாஹோ மற்றும் போரா சமூகத்துக்கான காதிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன

Date:

கண்டி மாவட்டத்தின் உடுநுவர, குருணாகல் மாவட்டத்தின் மாஹோ (மாஹோ, வாரியபொல, நிக்கவரட்டிய, கல்கமுவ, அம்பன்பொல, ஜாகம, பாலுகடவல, வல்பாலுவ, கனுக்கெட்டிய, அபுக்காகம மற்றும் அண்டிய பிரதேச சிறு கிராமங்கள்) மற்றும் போரா சமூகங்களுக்கான காதி நீதிபதிகளை நியமிப்பதற்கென தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை நீதிச் சேவைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

விண்ணப்பதாரிகள் ஆணாக இருக்க வேண்டும் என்பதோடு, பல்கலைக்கழகப் பட்டதாரிகள், மௌலவிகள், அல் ஆலிம் சான்றிதழ் உள்ளவர்கள், சட்டத்தரணிகள், அரச சேவையின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மாதச் சம்பளமாக 7,500 ரூபாவும் இதர செலவுகளுக்காக 6,500 ரூபாவும் வழங்கப்படும்.

விண்ணப்ப முடிவுத் திகதி 2025 ஜூலை 4 ஆம் திகதி, மேலதிக விபரங்கள் 2025 ஜூன் 06 ஆம் திகதிய வர்த்தமானியில்.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...