கொழும்பு மாநகரசபையின் முதல்வர் தெரிவு:ஆரம்பமானது இரகசிய வாக்கெடுப்பு

Date:

கொழும்பு மாநகரசபை மேயரை தெரிவுசெய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய மேல்மாகாண உள்ளுராட்சி சபை ஆணையாளர் எஸ்.கே. ஜயசுந்தர முன்னிலையில்  இரகசிய வாக்கெடுப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

இதேவேளை கொழும்பு மாநகர மேயர் தெரிவுக்காக வழங்கப்பட்ட வாக்குச்சீட்டில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாகக் கோரி சபையில் சர்ச்சை எழுந்துள்ளது.

மேயர் தெரிவுக்காக வழங்கப்பட்ட வாக்குச்சீட்டு சிங்கள மொழியிலும் ஆங்கில மொழியிலும் மாத்திரம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட நிலையில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக சபையில் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் உள்ளுராட்சி ஆணையாளர் வாக்குச் சீட்டை வாசித்துக் காட்டியதுடன், தமிழ் மொழியிலும் வாக்குச்சீட்டில் வேட்பாளர்களாக முன்மொழியப்பட்டவர்களின் பெயர் விபரங்களை அச்சிட்டு வழங்கப்பட்டது.

Popular

More like this
Related

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...