உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் ஜேவிபிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் சந்திப்பு

Date:

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் தற்போது சீனா சென்றுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உட்பட்ட ஜேவிபியின் பிரதிநிதிக்குழு சீன கம்யூனிஸ்ட் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஸிஜியாங் (Zhejiang) மாகாண ஆளுநர் லியு ஜியோ (Liu Jie) கலந்துகொண்டார்.

இச்சந்திப்பின் போது மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து சென்ற குழுவில் பிரதி அமைச்சர்களான எரங்க குணசேகர, முனீர் முழப்பர், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஜெகதீஸ்வரன், தீப்தி வாசலகே, தர்மப்பிரிய விஜேசிங்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

முதல்வராக விஜய் பதவியேற்பு: சென்னையில் ராகுல் காந்தி!:

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று(மே 10) பதவியேற்கவுள்ள நிலையில்,...

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...