மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுமாறு இலங்கை வேண்டுகோள்!

Date:

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து தரப்பினரிடமும் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய கிழக்கின் சமீபத்திய நிலவரங்கள் குறித்து இலங்கை மிகவும் கவலை கொண்டுள்ளது.

பதற்ற நிலையைத் தணிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து தரப்பினரையும் நாம் தொடர்ந்து கோரி வருகிறோம்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில், தொடர்புபட்ட அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென்பதுடன், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், அதனைப் பேணவும் தீவிர இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபடுவது அவசியமாகின்றது – என்று சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...