வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை

Date:

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

கொட்டாவையில் உள்ள  மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில்  வங்கி அட்டை கட்டண முறை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, காலி, மாத்தறை மற்றும் பதுளைக்கு செல்லும் பஸ்களுக்கான கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் பொதுமக்கள் செலுத்தலாம்.

அரச மற்றும் தனியார் வங்கிகள் உட்பட 05 வங்கிகள் இந்த முயற்சியில் இணைந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை: சட்டங்களை கடுமையாக்க இலங்கை அரசு பரிசீலனை!

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, அதுதொடர்பான குற்றங்களுக்கு மரண...

குழந்தைகளுக்கென அறிமுகமாகும் போசனைத் திட்டம்

கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்த ஊட்டச்சத்து நிலையை...

லங்கா மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கத்துக்கு 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை ஒதுக்கீடு!

லங்கா மெட்ரோ டிரான்சிட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகளை...