2026ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

Date:

2026 ஆம் ஆண்டு வரவு செலவு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகிறது. தேசிய மக்கள் சக்தியின் இரண்டாவது வரவு-செலவு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நேற்று நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது.
சுமார் 4 மணித்தியாலத்துக்கும் மேலாக முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில், அரச ஊழியர்களுக்கான வேதன அதிகரிப்பின் இரண்டாம் கட்டத்தை ஜனவரி மாதம் முதல் வழங்கவும், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரத்து 750 ரூபாய் வரை உயர்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் பொருளாதாரம் 2019 ஆம் ஆண்டில் இருந்த நிலையை இந்த ஆண்டின் இறுதியில் மீண்டும் அடையும் என்றும் ஜனாதிபதி தமது வரவு செலவு உரையில் தெரிவித்தார்.
இந்த நிலையில் வரவு செலவு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அத்துடன், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
அதன்பின்னர், வரவு செலவு மீதான மூன்றாம் வாசிப்புக்குரிய குழுநிலை விவாதம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மேலும், வரவு செலவு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மறுவாழ்வு நிலையங்களாக சிறைச்சாலைகள் மாற்றப்படும்:அமைச்சர் ஹர்ஷன

மறுவாழ்வு மற்றும் மீள் ஒருங்கிணைப்பு நிலையங்களாக சிறைச்சாலைகளை மாற்றுவதற்கு அரசாங்கம் விரிவான...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (08) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி வவுச்சர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் பாதணி வவுச்சர்களுக்குப்...

2026 வரவு – செலவுத்திட்டம்: : ஜனாதிபதி உரையின் முக்கிய விடயங்கள்; கிராமப்புற வறுமையை ஒழிக்க ஒரு புதிய வளர்ச்சித் திட்டம்.

ஒரு வளமான மற்றும் அழகான நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரின் ஆதரவையும் நாங்கள்...