தயாசிறி எம்.பியின் நடவடிக்கை குறித்து விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழு

Date:

தயாசிறி ஜயசேகர எம்.பியின் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் தலைவராக பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலியும் உறுப்பினர்களாக உபாலி பன்னிலகே மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

2025 செப்டெம்பர் 24 ஆம் திகதி சபா மண்டபத்தினுள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவின் செயல் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல செப்டெம்பர் 25 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்த முறைப்பாட்டைக் கவனத்தில் கொண்டு, அது தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உபாலி பன்னிலகே மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட மூவர் அடங்கிய குழுவொன்றை நான் நியமித்துள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என சபாநாயகர் இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...

தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (19) அதிகாலை தரையிறங்க திட்டமிடப்பட்ட...