பெண்கள், சிறுவர்கள் குறித்த தகவல்களை அறிவிக்க கட்டணமற்ற 2 தொலைபேசிகள் இலக்கங்கள் அறிமுகம்

Date:

அனர்த்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான எந்தவொரு தகவலையும் உடனடியாக தெரிவித்துக் கொள்ள இரண்டு கட்டணமில்லா தொலைபேசி சேவைகள் தற்போது 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுடன் இணைந்துள்ள தேசிய மகளிர் சபையின் 1938 பெண்கள் உதவி அவசர தொலைபேசி இலக்கம்  மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 சிறுவர் உதவி அவசர தொலைபேசி இலக்கங்கள் மூன்று மொழிகளில் இலவசமாக செயல்படுகின்றன.

  • பெண்கள் தொடர்பான தகவல்களுக்கு – 1938
  • சிறுவர்கள் தொடர்பான தகவல்களுக்கு – 1929

இந்த இரண்டு சேவைகளுக்கும் கட்டணம் இன்றியே, 24 மணி நேரமும் அழைத்து தகவல் பகிர முடியும்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு, நலன், அவசர உதவி மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இவ்விரு ஹாட்லைன்களும் முக்கிய பங்கு வகிப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...