‘சமநீதி’ மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா நாளை கொழும்பில்

Date:

‘சமநீதி’ (Equity) என்ற பெயரிலான புதிய மாதாந்த சஞ்சிகையொன்று இம்மாதம் முதல் வெளிவருகிறது.

இதன் அங்குரார்ப்பண விழா நாளை, பெப்ரவரி 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

Idea பதிப்பகம் மற்றும் சமநீதி ஆசிரியர் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில், ‘அனித்தா’ பத்திரிகையின் தலைமை ஆசிரியரும் சட்டத்தரணியுமான கே.டபிள்யூ. ஜனரஞ்சன அவர்கள் பிரதான உரையினை நிகழ்த்தவுள்ளார்.

அத்துடன் எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான சிராஜ் மஷூர் அவர்கள் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

பலதரப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய பொதுவான சஞ்சிகையாக வெளிவரும் இது, முஸ்லிம் சமூக விவகாரங்களையும் விசேட கவனத்தில் கொண்டு வெளியாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விசேட வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு ஆர்வமுள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘சிசு செரிய’ சேவையை மேலும் விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்!

பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...

மலேசியாவின் பகாங் மாநிலத்தில் புனித குர்ஆன் பல்கலைக்கழகம் உருவாக்கம்: சுல்தான் அப்துல்லா வரலாற்று அறிவிப்பு!

மலேசியாவின் பகாங் (Pahang) மாநிலத்தில் குர்ஆனியக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், 'புனித...

சாரதி அனுமதிப் பத்திர விண்ணப்பதாரர்களில் 8% பேருக்கு உடல்நலக் குறைபாடு.

இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் (Driving License) கோரி விண்ணப்பித்தவர்களில் சுமார்...

விளையாட்டுத் துறையை மேம்படுத்த ஆசிய ரக்பி சம்மேளனம் இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு!

துபாய், ஐக்கிய அரபு அமீரகம் – இலங்கையின் ரக்பி விளையாட்டை சர்வதேச...