இந்தியா-பாகிஸ்தான் போட்டி உறுதி; பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

Date:

கேள்விக் குறியாவிருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி:20 உலகக் கிண்ணத் தொடரின் போட்டியானது நடைபெறும் என்பதை பாகிஸ்தான் பிரதமர் உறுதிபடுத்தியுள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு தனது எக்ஸ் கணக்கில் நன்றி தெரிவித்தார்.

 

அந்தச் செய்தியில் ஜனாதிபதி அநுர,

நாம் அனைவரும் விரும்பும் ஆட்டம் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்ததற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு

அவர்களுக்கு நன்றி.

கொழும்பில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

போட்டியின் இணை விருந்தினராக, இலங்கை ஐசிசி மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அவர்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கிறது.

பாதுகாப்பு கவலைகள் காரணமாக பலர் விலகியிருந்த நேரத்தில், 1996 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் கொழும்பில் விளையாடிய போது அவர்கள் காட்டிய ஒற்றுமையை இலங்கை மறக்கவில்லை – என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி:20 உலகக் கிண்ணப் போட்டியானது எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இரவு 07.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை!

2027 ஜனவரி 1 ஆம் திகதி முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்...

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

குவைத்தின் தேசிய விமான நிறுவனமான குவைத் ஏர்வேஸ், எதிர்வரும் ஏப்ரல் 15...

புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் முன்மொழிவு: பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!

இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,  பிரதமரும் கல்வி, உயர்கல்வி...

அரபு நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: மத்திய கிழக்கில் அமைதி நிலவ இலங்கை ஆதரவு!

இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின்  உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார...