‘சமநீதி’ (Equity) என்ற பெயரிலான புதிய மாதாந்த சஞ்சிகையொன்று இம்மாதம் முதல் வெளிவருகிறது.
இதன் அங்குரார்ப்பண விழா நாளை, பெப்ரவரி 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
Idea பதிப்பகம் மற்றும் சமநீதி ஆசிரியர் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில், ‘அனித்தா’ பத்திரிகையின் தலைமை ஆசிரியரும் சட்டத்தரணியுமான கே.டபிள்யூ. ஜனரஞ்சன அவர்கள் பிரதான உரையினை நிகழ்த்தவுள்ளார்.
அத்துடன் எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான சிராஜ் மஷூர் அவர்கள் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
பலதரப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய பொதுவான சஞ்சிகையாக வெளிவரும் இது, முஸ்லிம் சமூக விவகாரங்களையும் விசேட கவனத்தில் கொண்டு வெளியாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விசேட வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு ஆர்வமுள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
