மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

Date:

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமைகளால்,எரிபொருள் குறித்து மக்களுக்கு ஏற்பட்ட பீதியையடுத்து நேற்றுக்காலை பத்து மணிக்கிடையில் 2,325,349 லீற்றர் டீசல் மற்றும் 2,904,000 லீற்றர் பெட்ரோலை விநியோகித்ததாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.

இதேபோன்று நேற்று முன்தினமும் 3,018,349 லீற்றர் டீசல் மற்றும் 3,920,400 லீற்றர் பெட்ரோலை பொது மக்களுக்காக விநியோகித்ததாகவும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

அதிகரித்த தேவையின் காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்காலிக எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது.

மோசடிக்காரர்கள் தற்போதைய நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

இதனால் வழக்கமான நுகர்வோருக்கு சிரமம் ஏற்படுகிறது. எரிபொருள் கேன்கள் அல்லது போத்தல்களில் வழங்கப்படாது.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போரினால் ஏற்பட்ட கவலைகள் இருந்தபோதிலும், நாட்டில் போதுமான எரிபொருள் தற்போதைய பெட்ரோல் கையிருப்பு 37 நாட்களுக்கு போதுமானது.

இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியாவிலிருந்து வரும் சரக்கு கப்பல்கள் மூலமே எமக்கான கேள்வி மனு சமர்ப்பிக்கப்பட்ட எரி பொருட்கள் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...

இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம்!

வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது,...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான  வானிலை நிலவக்கூடும்.என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய...