புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் முன்மொழிவு: பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!

Date:

இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,  பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பரிந்துரைக்கமைய ‘கல்விச் சபை’ ஒன்றினை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தக் கல்விச் சபையானது நான்கு பிரதான துறைகளை உள்ளடக்கியதாக அமையவுள்ளதுடன், சட்ட விவகாரங்கள், தர உறுதிப்படுத்தல், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான அங்கீகாரம் மற்றும் கல்விசார் நிபுணர்களுக்குச் சான்றளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இக்குழுவின் அறிக்கை தற்போது கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (https://moe.gov.lk) வெளியிடப்பட்டுள்ளது. அதன் பரிந்துரைகளை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, கல்விச் சபையை நிறுவுவதற்கான நாடாளுமன்ற துணைக்குழுவின் தலைவர் மஹிந்த ஜயசிங்கவின் ஆலோசனையின் பேரில், தற்போது பொதுமக்களின் கருத்துகளைக் கோரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தமது கருத்துகளை 2026 மே 12 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகப் பின்வரும் தபால் முகவரிக்கு அல்லது மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொள்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை!

2027 ஜனவரி 1 ஆம் திகதி முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்...

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

குவைத்தின் தேசிய விமான நிறுவனமான குவைத் ஏர்வேஸ், எதிர்வரும் ஏப்ரல் 15...

அரபு நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: மத்திய கிழக்கில் அமைதி நிலவ இலங்கை ஆதரவு!

இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின்  உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

ஜும்ஆ பிரசங்கங்களில் நடுநிலையையும், சமூகப் பொறுப்பையும் கடைப்பிடியுங்கள்; முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் புதிய வழிகாட்டல்.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்களின் போது,  சர்வதேச விவகாரங்கள்...