வக்ப் சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்: பிரதி அமைச்சர் முனீர் முளப்பரால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!

Date:

27 ஆவது வக்ப் சபையின் புதிய உறுப்பினர்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றனர்.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தரும நிதியங்களை ஒழுங்கபடுத்தும் உச்ச அமைப்பான வக்ப் சபையின் புதிய தலைவர் மற்றும் சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, இன்று மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் நடைபெற்ற இந்த விஷேட நிகழ்வின் போது, புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மர்ஷாத் பாரி அவர்கள் உட்பட ஏழு பேரைக் கொண்ட வக்ப் சபை உறுப்பினர்கள் பிரதி அமைச்சரிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இந்த நியமனமானது 2026 ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் மூன்று ஆண்டு காலத்திற்கு செல்லுபடியாகும்.

நியமனம் பெற்ற வக்ப் சபையின் புதிய உறுப்பினர்கள் பின்வருமாறு,

1. எம்.மர்ஷட் பாரி (தலைவர்)
2. அஷ்-ஷைக் எம்.எஸ்.எம்.இஹ்ஸான் ரஷாதி
3. எம்.வை.ஏ.ரிபாக் அஹமட்
4. ஏ.எம்.ஜே.எம்.ஜவ்பர்
5. சட்டத்தரணி செய்னுல் மசூதீன்
6. எம்.ஏ.எம்.அரூஸ்

7. எம்.ஐ.அமினுடீன்

இந் நிகழ்வில் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர், முஸ்லிம் மத அமைப்புகளின் நிர்வாக நடவடிக்கைகளை முறைப்படுத்துவதும், பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதும் புதிய சபையின் பொறுப்பாகும் என வலியுறுத்தினார்.

குறிப்பாக பள்ளிவாசல் நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சட்டபூர்வமாகவும் நியாயமான முறையில் தீர்க்க புதிய தலைவர் மற்றும் குழுவினர் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையையும் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் முஸ்லிம் மத மற்றும் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...

பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்...