வியட்நாம் ஜனாதிபதி To Lam இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கமைய இன்று இரவு அவர் நாட்டை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி உள்ளிட்ட 200 பேரைக் கொண்ட தூதுக்குழு இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளது. வியட்நாம் ஜனாதிபதி டோ லம் நாளைய தினம் இலங்கை பாராளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளார்.
இதேவேளை வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் போது கொழும்பு நகரில் இன்றும் நாளையும் விசேட வாகன போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
