சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயரிய நோக்கில், புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரிக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று (23) சிறப்பாக நடைபெற்றது.
தொடர்பாடலும் ஊடக கற்கை நெறி (Communication and Media Studies) பாட வளவாளரான திரு. தேவநேசன் அவர்கள் கல்லூரிக்கான மரக்கன்றுகளை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.
கல்லூரி வளாகத்தை மேலும் பசுமையாக்கும் பரந்த முயற்சியின் ஒரு அங்கமாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாணவிகளிடையே சுற்றுச்சூழல் சார்ந்த பொறுப்புணர்வை வளர்ப்பதோடு, மரநடுகையின் அவசியம் மற்றும் இயற்கை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நடைமுறை ரீதியாக உணர்த்துவதற்கு இச்செயற்திட்டம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் மாணவிகள் இப் பசுமை முயற்சிக்குத் தங்களது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
