தென்கொரியாவின் சர்வதேச மதநல்லிணக்கக் குழுவின் பிரதிநிதிகளும், தர்ம சக்தி அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து கண்டி மல்வத்து மகா விகாரைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர்.
இன்று மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரை அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.
சர்வதேச ரீதியில் பௌத்த மத விழுமியங்களைப் பாதுகாப்பது, உலகளாவிய ஆன்மீக ஒருமைப்பாடு மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கை மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான ஆன்மீக மற்றும் கலாசார ரீதியிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் இரு தரப்பினரும் தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
மத சுதந்திரம் மற்றும் உலக அமைதியை மையமாகக் கொண்டு செயல்படும் இக்குழுவினரின் இந்த கண்டி விஜயம், இரு நாட்டு பௌத்த சமூகங்களுக்கு இடையிலான உறவில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

