2026 ஆம் ஆண்டிற்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
முதல் வினாத்தாள் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை, இரண்டாம் வினாத்தாள் காலை 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை
விண்ணப்பதாரர்களின் வருகைப் பதிவேடுகள் பாடசாலைகள் மூலம் அந்தந்த வலயக் கல்வி அலுவலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்களைச் செய்ய வேண்டியிருப்பின், பெற்றோர் மற்றும் பாடசாலைகளுக்கு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை இணையவழியில் (Online) திருத்தங்களை மேற்கொள்வதற்கான வசதி அளிக்கப்பட்டுள்ளது.
பின்வரும் உத்தியோகபூர்வ இணையதளங்கள் வாயிலாக இத்திருத்தங்களைச் செய்யலாம் www.doenets.lk (“Our Services” → “Exam Information Centre” பகுதி மூலம்) www.onlineexam.gov.lk மேலதிக தகவல்களுக்கு தொலைபேசி இலக்கங்கள்: 011-2784208, 011-2784537, 011-2786616, 011-2785413, அவசர உதவி இலக்கம் (Hotline): 1911 இலக்கங்களைத் தொடர்பு கொள்ள முடியும்.
