இந்த வருடத்தில் இதுவரை இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை நாட்டில் மொத்தமாக 92,854 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் 52.95 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியில் டெங்கு நோயின் அதிக தாக்கம் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 19,778 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 18,433 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,695 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
