ஆளும்கட்சியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 22வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுது;தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நாளைய தினம் விசாரணைக்கு எடுக்கவுள்ளதாக உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது.
இந்த மனுக்களை விசாரிப்பதற்காக பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேனவினால் ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி குழாமொன்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கமைய குழுவின் தலைவராக பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன செயற்படுவார்.
