கடந்த வாரம் நிலவிய ஐந்து நாள் விடுமுறை காலத்தில் இலங்கையின் அதிவேகப் பாதைகள் மூலமாக 355 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கடந்த வாரத்தில் மட்டும் அதிவேகப் பாதைகளைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 408 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளதாக அவ்வதிகார சபை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 24 முதல் 30 வரையிலான காலப்பகுதியில் தெற்கு அதிவேகப் பாதை, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதை, கொழும்பு வெளிவட்ட அதிவேகப் பாதை மற்றும் மத்திய அதிவேகப் பாதை ஆகியவற்றில் மொத்தம் 1,095,895 வாகனங்கள் பயணித்துள்ளதாக RDA குறிப்பிட்டுள்ளது.
