இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சிக்கு கணசமான பங்களிப்பை வழங்கும் ஒரு நிறுவனமாக இருந்துவரும் பேருவளையில் அமைந்துள்ள ஜாமியா நளீமியா கலாபீடம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (ஆகஸ்ட் 19) 53 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
1973ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தன்று இக்கலாபீடம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்கள் பிரதம அதிதியாகவும், இந்தியாவின் டெல்லி மாநகரைச் சேர்ந்த மௌலானா இனாமூல் ஹஸன் அவர்களை சிறப்பு அதிதியாகவும் கொண்டு, ஜாமியா நளீமியாவின் ஸ்தாபகரும் நிறுவனத்தின் தலைவருமான அல்ஹாஜ் எம்.ஐ.எம். நளீம் அவர்களின் பங்களிப்போடு அன்றைய தினத்தில் இக்கலாபீடம் திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழா நிகழ்ச்சிக்காக அன்று தயாரிக்கப்பட்ட அழைப்பிதழ் இச்செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

