நாட்டின் பல மாவட்டங்களில் இன்றைய தினம் (14) அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை உயர்வடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலேயே இந்நிலைமை எதிர்பார்க்கப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களில் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை காணப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, திறந்தவெளியில் தீவிர வேலைகளில் ஈடுபடுவதைக் குறைத்துக்கொள்ளுமாறும், தேவையான அளவு அதிகளவு நீர் அருந்துமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
