ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய ‘ஏர்பஸ்’ (Airbus) ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இன்று காலை நாமல் ராஜபக்ஷவை அழைத்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (04) காலை அங்கு ஆஜரானார்.
சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
