துனிசியாவில் கடும் வெப்பம்: சிறைகளில் 20 கைதிகள் உயிரிழந்ததாக மனித உரிமைகள் அமைப்பு தகவல்!

Date:

 துனிசியாவில் கடந்த சில வாரங்களாக வீசி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, அந்நாட்டுச் சிறைகளில் 20 கைதிகள் உயிரிழந்துள்ளதாகத் துனிசிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் (LTDH) தலைவர் பாசம் அல்-த்ரீஃபி  தெரிவித்துள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டிப் பதிவாகியுள்ளது. இது குறித்து பாசம் அல்-த்ரீஃபி தெரிவிக்கையில்,

போதுமான காற்றோட்டம் இல்லாதது மற்றும் கைதிகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருப்பது போன்ற சிறைகளின் மோசமான சூழல்கள், இந்த வெப்ப அலையால் மேலும் தீவிரமடைந்துள்ளன.

சிறைகளில் நிலவும் இந்த இக்கட்டான நிலைமைகள் “சித்திரவதைக்குச் சமமானது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடும் வெப்பம் காரணமாக ஏற்பட்ட பக்கவாதத்தால் 50 வயதுடைய கைதி ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தலைநகர் துனிஸில் உள்ள அல்-முர்னாகியா சிறையில், வெப்பம் காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறலால் மற்றொரு கைதி உயிரிழந்ததாக ஏ.எஃப்.பி (AFP) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறைகளில் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பங்களாதேஷில் 1 பில்லியன் டொலர் மதிப்பிலான எரிசக்தி ஒப்பந்தம்: பிரதமர் தாரிக் ரஹ்மான் முன்னிலையில் கையெழுத்து!

பங்களாதேஷின் 'ஈஸ்டர்ன் ரீஃபைனரி லிமிடெட்'   நிறுவனத்தைச் நவீனமயமாக்குவதற்கும் விரிவாக்கம் செய்வதற்கும் 1...

தெஹிவளை பாபக்கர் பள்ளிவாசல் வழக்கு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை!

தெஹிவளை பாபக்கர் பள்ளிவாசல் தொடர்பான மீளாய்வு மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான...

2026 ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 96,040 டெங்கு நோயாளர்கள்!

2026 ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 96,040 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக...

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரிக்கும் ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்ஷ கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல்...