வறண்ட வானிலையால் 68,041 பேர் பாதிப்பு!

Date:

வறண்ட வானிலையால் 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசியப் பேரிடர் நிவாரணச் சேவைகள் மையம் தெரிவித்துள்ளது.

நான்கு மாவட்டங்களில் உள்ள 17 கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்தார்.

மட்டிக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள மக்கள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, 21,873 குடும்பங்களைச் சேர்ந்த 68,041 பேர் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள 3,495 குடும்பங்களைச் சேர்ந்த 12,291 பேருக்குத் தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரகீத் தனன்சூரிய தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக உள்ளூராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கையில் பாகிஸ்தானின் 79-வது சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாட்டம்!

இலங்கையிலுள்ள பாகிஸ்தான்  உயர்ஸ்தானிகராலயமும்,  பாகிஸ்தானிய சமூகத்தினரும் இணைந்து பாகிஸ்தானின் 79-வது சுதந்திர...

எட்டு இலட்சம் பாடப்புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள...

2026 இல் சைபர் குற்றங்கள் தொடர்பில் 1,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் இலங்கையில் கைது!

இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக இலங்கைப் பொலிஸார் மேற்கொண்டு வரும் தீவிர...