வடகொரியா இன்று இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது

Date:

ஜப்பான் கடல் பகுதியில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன

புதிய அமெரிக்க ஜனாதிபதி ஜோய் பைடன் பதவிக்கு வந்தபின் வடகொரியா நடத்தியுள்ள பிரதான ஏவுகணை சோதனையாக இது கருதப்படுகின்றது இத்தகைய சோதனைகளை நடத்துவது

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் பிரகாரம் தடை செய்யப்பட்டுள்ளது இருப்பினும் அந்த தடையை மீறி வடகொரியா இவ்வாறான சோதனைகளை நடத்தி வருகின்றது ஜப்பானும் தென் கொரியாவும் உடனடியாக இந்த சோதனையை கண்டித்துள்ளன ஒரு சில தினங்களுக்கு முன்னர் வடகொரியா சாதாரண

ஏவுகணைகள் இரண்டை மஞ்சள் கடல் பகுதியில் சோதனைக்கு உட்படுத்தி இருந்தது ஆனால் இன்றைய சோதனை ஜப்பானிய கடல் பரப்பை நோக்கி நடத்தப்பட்டுள்ளது இருப்பினும் இதன் ஒரு தூசு கூட தன்னுடைய
ஆளுகை பரப்புக்கு உட்பட்ட எல்லைக்குள் விழவில்லை என்று ஜப்பான் அறிவித்துள்ளது. இதே நேரம் வடகொரியா அதன் அண்டை நாடுகளுக்கும் சர்வதேச சமூகத்துக்கும்

எந்த வகையில் ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்பதையே இந்த சோதனைகள் நிரூபித்து உள்ளதாக அமெரிக்க பசுபிக் ராணுவ கட்டளையகம் அறிவித்துள்ளது .

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...