வீடு ஒன்றில் பாரிய வெடி விபத்து!

Date:

இப்பாகமுவ – பன்னல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

நேற்று இரவு (24) இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பட்டாசுகளிலிருந்து வெடிமருந்துகளை அகற்றி, இரும்புக் குழாயில் வைத்து மின் இயந்திரத்தின் மூலம் அந்த குழாயை வெட்டும்போது இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

குண்டுவெடிப்பில் காயமடைந்த 22 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்கள் சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் ஒரு இளைஞர் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து கொகருல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...