வீடு ஒன்றில் பாரிய வெடி விபத்து!

Date:

இப்பாகமுவ – பன்னல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

நேற்று இரவு (24) இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பட்டாசுகளிலிருந்து வெடிமருந்துகளை அகற்றி, இரும்புக் குழாயில் வைத்து மின் இயந்திரத்தின் மூலம் அந்த குழாயை வெட்டும்போது இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

குண்டுவெடிப்பில் காயமடைந்த 22 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்கள் சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் ஒரு இளைஞர் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து கொகருல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...