இந்தியா போன்று இலங்கை மாறும் அபாயம் என எச்சரிக்கை

Date:

 

இந்தியா போன்று இலங்கை மாறும் அபாயத்தில் உள்ளதாக இலங்கை வைத்திய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் நிலைமைக்கமைய ஒரு வேலைத்திட்டத்தை பின்பற்றி வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தாமல் இருப்பதற்கு தீரமானம் மேற்கொள்ளவில்லை என்றால் இந்தியா போன்ற நிலைமை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் மிகவும் பொறுப்புடன் சுகாதார ஆலோசனைகளை பிற்பற்றுமாறு சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணசேகர பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களுக்கு உரிய சுகாதார முறையை பின்பற்றவில்லை என்றால் நிச்சயம் இந்தியாவின் நிலைக்கு தள்ளப்படுவோம்.

வீட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் ஏனையவர்களும் முகக் கவசம் அணிந்து மிகவும் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும். இல்லை என்றால் வீட்டில் அனைவருக்கும் கோவிட் தொற்று ஏற்பட்டு நாடு அபாய கட்டத்தை நோக்கி சென்று விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...