இந்தியா போன்று இலங்கை மாறும் அபாயம் என எச்சரிக்கை

Date:

 

இந்தியா போன்று இலங்கை மாறும் அபாயத்தில் உள்ளதாக இலங்கை வைத்திய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் நிலைமைக்கமைய ஒரு வேலைத்திட்டத்தை பின்பற்றி வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தாமல் இருப்பதற்கு தீரமானம் மேற்கொள்ளவில்லை என்றால் இந்தியா போன்ற நிலைமை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் மிகவும் பொறுப்புடன் சுகாதார ஆலோசனைகளை பிற்பற்றுமாறு சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணசேகர பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களுக்கு உரிய சுகாதார முறையை பின்பற்றவில்லை என்றால் நிச்சயம் இந்தியாவின் நிலைக்கு தள்ளப்படுவோம்.

வீட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் ஏனையவர்களும் முகக் கவசம் அணிந்து மிகவும் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும். இல்லை என்றால் வீட்டில் அனைவருக்கும் கோவிட் தொற்று ஏற்பட்டு நாடு அபாய கட்டத்தை நோக்கி சென்று விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...