சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களின் கற்பித்தல் செயற்பாடுகள் நாளை மறுதினம் ஆரம்பம்!

Date:

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் சாதாரண தர மற்றும் உயர்தரங்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை நாளை மறுதினம் (08) முதல் கட்டாயம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தரம் 10,11 ,12 மற்றும் 13 மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை‌ ஆரம்பிப்பதற்கு கொவிட் 19 தடுப்பு செயலணி பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது ‌.

கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது.தரம் 6 முதல் 9 வரையான கற்பித்தல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை 50% மாணவர்களுடன் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இத் தீர்மானம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணரத்னவினால் வெளியிடப்பட்ட வழிகாட்டிக்கு அமைவாகவே எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த தென்கொரிய சமாதான அமைப்பின் சர்வமத தலைவர்கள்.

தென்கொரியாவின் சர்வதேச மதநல்லிணக்கக் குழுவின் பிரதிநிதிகளும், தர்ம சக்தி அமைப்பின் பிரதிநிதிகளும்...

இலவச பாதணி விநியோகம்: 3,000 ரூபா பெறுமதியான வவுச்சர்களுக்கு அனுமதி!

தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் துறவு...

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிப்பு

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி...

ரஷ்யாவில் LGBT விடுதி உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு கடும் சிறைத்தண்டனை: முதல்முறை கடுமையான நடவடிக்கை!

ரஷ்யாவில்   (LGBT) இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையின் கீழ் தொடரப்பட்ட முதல் வழக்கில்,...