சியாரா லியோனில் எண்ணெய் தாங்கி வெடித்து 92 பேர் பலி!

Date:

சியாரா லியோனில் எண்ணெய் தாங்கி வெடித்ததில் 92 பேர் உயிரிழந்துள்ளனர்.100 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஆபிரிக்க கண்டத்தில் உள்ள சியாரா லியோன் தலைநகரான ப்ரீடவுனில் எண்ணெய் தாங்கி ஒன்று மற்றொரு வாகனம் மீது மோதியதை தொடர்ந்து வெடித்தது.

இதில் 92 பேர் உயிரிழந்துள்ளதோடு 100 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசு உறுதி செய்யவில்லை.அதேநேரத்தில் 91 சடலங்கள் வந்துள்ளதாக பிணவறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.எண்ணெய் தாங்கி மோதியதை தொடர்ந்து அதிலிருந்து கசிந்த எரிபொருளை சேகரிக்க மக்கள் கூடிய போது அப்போது எண்ணெய் தாங்கி வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தாங்கி வெடித்ததால் அருகில் இருந்த கடைகள் மற்றும் கட்டடங்களில் தீ பரவி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

காயமடைந்தவர்கள்அந் நகரில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...