நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரத சேவைகள் ஆரம்பம்!

Date:

நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரத சேவைகள் நாளை (08) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

180- 200 புகையிரத சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நாளை முதல் (08) காங்கேசன்துறை மற்றும் கொழும்பு முதல் கண்டி வரையில் புகையிரத சேவை ஆரம்பிக்கப்படும்.வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளைக்கான புகையிரத சேவைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

இரவு நேர அஞ்சல் புகையிரத சேவைகளையும் ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...