மூத்த அரசியல் ஆய்வாளரும், நூலாசிரியரும், பன்முக ஆளுமையாளருமான  ஏ.ஜே.எம்.நிழாம் காலமானார்

Date:

மூத்த அரசியல் ஆய்வாளரும், நூலாசிரியரும், பன்முக ஆளுமையாளருமான  ஏ.ஜே.எம்.நிழாம் நாம்புலுவ பஸ்யாலையில்  காலமானார்.

கொழும்பு, புதுக்கடையை பிறப்பிடமாகக்கொண்ட அவர் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினர் என்பதுடன் 1988 ஆம் ஆண்டு இடம்பெற்ற மேல் மாகாண சபை தேர்தலில் அக்கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

1990 ஆம் ஆண்டு “முஸ்லிம் காங்கிரஸ் ஆக்கமா? அழிவா?” என்ற தன்னுடைய முதலாவது நூலை எழுதி வெளியிட்டு அதன் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் இடம் பாராட்டுதல்களையும் பெற்றுக்கொண்டார்.

இது தவிர, அவர் தேசிய பத்திரிகைகளில் நூற்றுக்கணக்கான அரசியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (15) மாலை 4.00 மணியளவில் நாம்புலுவையில் இடம்பெறும்

மேலும் “தலைசிறந்த  செயற்பாட்டாளரும், நூலாசிரியரும், பன்முக ஆளுமைமிக்கவருமான  ஏ.ஜே.எம். நிலாமின் மறைவு சமூகத்துக்கு பாரிய இழப்பாகும்” என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீரிகம தேர்தல் தொகுதி அமைப்பாளர் எம்.யூ ஆதிக் தெரிவித்துள்ளார்.

 

நன்றி Siyane News

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...