மூத்த அரசியல் ஆய்வாளரும், நூலாசிரியரும், பன்முக ஆளுமையாளருமான  ஏ.ஜே.எம்.நிழாம் காலமானார்

Date:

மூத்த அரசியல் ஆய்வாளரும், நூலாசிரியரும், பன்முக ஆளுமையாளருமான  ஏ.ஜே.எம்.நிழாம் நாம்புலுவ பஸ்யாலையில்  காலமானார்.

கொழும்பு, புதுக்கடையை பிறப்பிடமாகக்கொண்ட அவர் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினர் என்பதுடன் 1988 ஆம் ஆண்டு இடம்பெற்ற மேல் மாகாண சபை தேர்தலில் அக்கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

1990 ஆம் ஆண்டு “முஸ்லிம் காங்கிரஸ் ஆக்கமா? அழிவா?” என்ற தன்னுடைய முதலாவது நூலை எழுதி வெளியிட்டு அதன் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் இடம் பாராட்டுதல்களையும் பெற்றுக்கொண்டார்.

இது தவிர, அவர் தேசிய பத்திரிகைகளில் நூற்றுக்கணக்கான அரசியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (15) மாலை 4.00 மணியளவில் நாம்புலுவையில் இடம்பெறும்

மேலும் “தலைசிறந்த  செயற்பாட்டாளரும், நூலாசிரியரும், பன்முக ஆளுமைமிக்கவருமான  ஏ.ஜே.எம். நிலாமின் மறைவு சமூகத்துக்கு பாரிய இழப்பாகும்” என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீரிகம தேர்தல் தொகுதி அமைப்பாளர் எம்.யூ ஆதிக் தெரிவித்துள்ளார்.

 

நன்றி Siyane News

Popular

More like this
Related

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...

இலங்கை – ஐக்கிய அரபு அமீரகம்: வர்த்தகம் மற்றும் துறைமுக முதலீடுகளை மேம்படுத்த உயர்மட்ட பேச்சுவார்த்தை!

இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தூதுவர் காலித் நாசர் அல்-அமெரி...

இலங்கையில் வருடாந்தம் ஆஸ்துமாவினால் 6% மரணங்கள் பதிவு!

இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும் ஒட்டுமொத்த மரணங்களில் சுமார் 6% மரணங்கள் ஆஸ்துமா...