பாலஸ்தீன போராளிகளின் பயிற்சி முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

Date:

இஸ்ரேல் கடற்கரை அருகே ரொக்கட் ஏவுகணைத் தாக்குதலை பாலஸ்தீனம் நிகழ்த்தியது

இதற்கு பதில் வழங்கும் வகையில் காசா பகுதியிலுள்ள ஹமாஸ் பயிற்சி நிலையங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை (01) ரொக்கெட் தயாரிக்கும் நிலையம் மற்றும் ஹமாஸின் இராணுவ நிலைகளைத் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

எங்கள் மக்களைப் பாதுகாப்பதற்கும், எமது நிலம் மற்றும் புனிதஸ் தளத்தை விடுவிப்பதற்காக எங்களுடைய கடமை தொடரும்” என்று காசிம் கூறினார். “எங்கள் மக்களின் இலக்குகள் விடுதலை மற்றும் மீள்வதன் மூலம் அதனை அடையும் வரை போராட்டத்தை விட மாட்டோம்.

கடந்த சனிக்கிழமையன்று நடந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

செப்டம்பரில் நடந்த ஒரு சம்பவத்தைத் தவிர, மே மாதம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் 11 நாளுக்கு பின் முடிவுக்கு வந்ததிலிருந்து எல்லை தாண்டிய ரொக்கெட் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை.

எகிப்து மற்றும் பிற மத்தியஸ்தர்களால் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தம் பலவீனமாக உள்ளது. 2007 ஆம் ஆண்டு காசா மீது எகிப்தின் உதவியுடன் இஸ்ரேல் விதித்த தடையை தளர்த்துவதற்கு இஸ்ரேல் தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஹமாஸ் கூறுகிறது.

260 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள், அவர்களில் பலர் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் 13 இஸ்ரேலியர்கள் காசா மீதான மே தாக்குதலில் கொல்லப்பட்டனர், இதன் போது இஸ்ரேல் கடலோரப் பகுதி முழுவதும் இடைவிடாத வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, காசா போராளிகள் இஸ்ரேலிய நகரங்களை நோக்கி ரொகெட்டுகளை வீசத் தொடங்கினர்.இஸ்ரேல் காசாவை முற்றுகையிட்டது. இரண்டு மில்லியன் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் பிரதேசத்திலிருந்து வெளியேறுவதை தடுத்தனர். எகிப்தும் என்கிளேவ் மீது கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறது.இந்த கட்டுப்பாடுகளுக்கு ஹமாஸின் அச்சுறுத்தல்களை இருவரும் மேற்கோள் காட்டுகின்றனர்.

இந்த முற்றுகையானது காசாவின் உள்ளேயும் வெளியேயும் பொருட்கள் மற்றும் மக்கள் செல்வத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அப் பிரதேசத்தின் பொருளாதாரத்தை நாசமாக்கியது மற்றும் இரண்டு மில்லியன் மக்களுக்கு தீங்கு விளைவித்துள்ளது.

செய்தி மூலம்: அல் ஜெஸீரா.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2022/1/2/israel-strikes-gaza-after-rocket-attacks-army&ved=2ahUKEwidteSq5ZT1AhUp7HMBHQw3AAYQFnoECAgQAQ&usg=AOvVaw2R-caX-FsR_Ejms5zDGQ8J

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...