ஆப்கான் ஆழ்துளைக்கிணற்றில் சிக்கிய சிறுவன் உயிரிழப்பு!

Date:

ஆப்கானிஸ்தானின் காபுல் மாகாணத்தில்
ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்து சிக்கிக்கொண்ட 5 வயது சிறுவன் மீட்கப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வறண்ட கிராமமான ஷோக்காக்கில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, சிறுவன் ஹைதரின் தாத்தாவான ஹாஜி ஆழ்துளைக்கிணறு தோண்டும் இடத்தில் சில உதவிகளை செய்து வந்துள்ளார்.அப்போது சிறுவன் அந்த இடத்தில்
ஆழமுடைய அந்த ஆழ்துளை கிணற்றில் 10 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டான்.ஆரம்பத்தில் அங்கிருந்தவர்கள் சிறுவனை கயிறு மூலமாக மீட்க செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தததையடுத்து மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்று ஜே.சி.பி இயந்திரங்களின் தோண்டி கிட்டத்தட்ட 4 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நேற்று மதியம் மீட்கப்பட்டான்.மீட்கப்பட்ட சில நிமிடங்களிலெயே சிறுவனுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. பின்னர் ஹெலிக்காப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...