சோமாலியாவில் குண்டு வெடிப்பு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

Date:

சோமாலியா நாட்டில் தற்கொலை படையினர்
நடத்திய பயங்கர குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

Beledweyne நகரில் உள்ள உணவகம் ஒன்றில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உணவு அருந்தி கொண்டிருந்த போது அங்கு வந்த தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவன் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இத் தாக்குதலுக்கு al Shabaab என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குண்டுவெடிப்பில் உயிரிழந்த 13பேரில் ஒருவர் அந் நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஆவார்.

இந்த தாக்குதலில் 18க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். சோமாலியாவில் வருகிற 25 ஆம் திகதியுடன் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...