இலங்கை பங்களாதேஷிடம் கடன் கோரிக்கை: முதலாவது கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய காலம் நீட்டிப்பு

Date:

பங்களாதேஷிடம் இருந்து மேலதிக நிதியுதவிக்கான கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஊடகங்களிடம் பேசிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, நாணய மாற்றமாக மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கோரியுள்ளது.

இது முன்னைய பங்களாதேஷ் வழங்கிய 250 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் கூடுதலாகும். அதேநேரம் முந்தைய கடனை திருப்பிச் செலுத்தும் காலம் பங்களாதேஷ் வங்கியால் நீட்டிக்கப்பட்டதாக நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கை மற்றொரு கடனுக்கான சமீபத்திய கோரிக்கை தற்போது பரிசீலனையில் உள்ளது என்று பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் அப்துல் மொமன் மேலும் கூறினார்.

மேலும் பங்களாதேஷ் நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் கூறிய அவர், நிலைமை எவ்வாறு உருவாகும் என்பதையும் அவர்கள் மதிப்பீடு செய்து வருவதாகவும், நிலைமையைப் பொறுத்து இலங்கையின் கோரிக்கை குறித்து முடிவெடுக்கும் என்றும் கூறினார்.

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...