அலி சப்ரி ஏன் நிதி அமைச்சரானார் : ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலகத் தயார்

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று அரசாங்கக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறத் தயாராக இருப்பதாகவும், சில இராஜாங்க அமைச்சர்கள் ஏற்கனவே தமது அமைச்சுக்களைப் பெறத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோரிக்கைகள் கருத்துகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று 3 மணிக்கு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அலி சப்ரி ஏன் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார்? எதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பதுதான் இன்று அவர்கள் எழுப்பியுள்ள சில கேள்விகள்.

நாடு இவ்வளவு பாரிய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியை எதிர்நோக்கும் போது மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்கள் ஏன் நியமிக்கப்படவில்லை என்பது இன்னொரு விடயம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதியுடனான சந்திப்பில் தமது கவலைகளை களைந்து அதன் பின்னர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...