அலி சப்ரி ஏன் நிதி அமைச்சரானார் : ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலகத் தயார்

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று அரசாங்கக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறத் தயாராக இருப்பதாகவும், சில இராஜாங்க அமைச்சர்கள் ஏற்கனவே தமது அமைச்சுக்களைப் பெறத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோரிக்கைகள் கருத்துகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று 3 மணிக்கு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அலி சப்ரி ஏன் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார்? எதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பதுதான் இன்று அவர்கள் எழுப்பியுள்ள சில கேள்விகள்.

நாடு இவ்வளவு பாரிய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியை எதிர்நோக்கும் போது மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்கள் ஏன் நியமிக்கப்படவில்லை என்பது இன்னொரு விடயம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதியுடனான சந்திப்பில் தமது கவலைகளை களைந்து அதன் பின்னர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

லெபனான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்தத்தில் இருந்து விலகுவோம்: ஈரான் எச்சரிக்கை.

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட  பிறகு,நேற்று...

சில பகுதிகளில் பிற்பகலில் மழை: நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையில்லாத வானிலை

மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா...

கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை!

2027 ஜனவரி 1 ஆம் திகதி முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்...

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

குவைத்தின் தேசிய விமான நிறுவனமான குவைத் ஏர்வேஸ், எதிர்வரும் ஏப்ரல் 15...