‘கம்பளை ஆண்டியாகடவத்தை’ நூல் வெளியீட்டு நிகழ்வு

Date:

‘கம்பளை ஆண்டியாகடவத்தை, ஓர் ஆற்றல்ககரை கிராமத்தின் வரலாறு’ எனும் புத்தக வெளியீடு இன்றையதினம் கம்பளையில் ஆண்டியா கடவத்தை அப்ரார் ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு ரியாஸ் மொஹமட் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, பெருநாள் பிரசங்கத்தின் பிறகு இந்த நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது.

குறித்த விழாவின் போது பிரதம அதிதியாக கொழும்பு ரிஸானா ஜேம்ஸ் மற்றும் ஜீவல்ரி நிறுவனத்தின் உரிமையாளர் அல்ஹாஜ். ஜே. எம். இம்தியாஸ், நூல் அறிமுகத்திற்காக கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி என். கபூர்தீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும், இன்னும் முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்ததுடன் ‘சமூக அபிவிருத்தி மற்றும் ஆய்வுகளுக்கான மையத்தின் உறுப்பினர்களது சுமார் மூன்று வருடகால கடும் முயற்சியின் விளைவாக இந்நூல் இன்று வெற்றிகரமாக வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...