நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கான திகதியை நாளை சபாநாயகர் அறிவிப்பார்!

Date:

நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதியை தீர்மானிக்கும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (9) முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சிங்கள ஊடகமொன்று கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது, இது தொடர்பில் நாளை விரிவாக கலந்துரையாடப்படும், எனவும் நாட்டின் பிரச்சினை மற்றும் பாராளுமன்றத்திற்கு அருகில் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

அத்தோடு நாளை நடைபெறும் கூட்டத்தின் பின்னர் சபாநாயகர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்த உள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது, ஹரீன் பெர்னாண்டோ மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் சார்ஜன்டை தாக்கி செங்கோலை பறிக்க முயற்சித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதான அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையையும், ஜனாதிபதிக்கு எதிரான மற்றுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் பிரதமர் அண்மையில் சபாநாயகரிடம் கையளித்தார்.

Popular

More like this
Related

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...

மோசமான வானிலை: ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர...

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...