இலங்கையர்களுக்கு தகவல் தொழில்நுட்ப வேலைகளை வழங்கும் ருமேனியா!

Date:

இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் திறன் கொண்ட இளைஞர்கள் எதிர்காலத்தில் ருமேனியாவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் இணைவதற்கான தொழில்வாய்ப்பைப் பெறுவார்கள் என இலங்கைக்கான ருமேனிய தூதுவர் விக்டர் சியூடியா தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (07) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே இலங்கைக்கான ருமேனிய தூதுவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் ருமேனியாவில் அதிகளவில் முதலீடு செய்து வருவதாகவும், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த திறமையான தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்தேசிய நிறுவனங்கள் மற்றும் ரோமானிய நிறுவனங்களில்  தொழில்நுட்ப நிபுணர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைகள் இருக்கலாம் என்றார்.

உயர்கல்வித் துறையில் ஒத்துழைப்பைப் பற்றி விவாதிப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் ஒரு பரிமாற்ற விஜயத்தின் கீழ், இலங்கை கல்வியாளர்கள் குழு விரைவில் ருமேனியாவுக்குச் செல்லவுள்ளதாக தூதுவர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிப்பதற்கு இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் குணவர்தன மற்றும் ருமேனிய தூதுவர் கலந்துரையாடியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் ருமேனியா இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்த பிரதமர், இலங்கைக்கு வழங்கப்பட்ட ருமேனிய ரயில் பெட்டிகள் மற்றும் தண்டவாளங்கள் குறித்து விசேடமாக குறிப்பிட்டார்.

இலங்கையுடன் இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பதற்காக தமது நாடு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடவுள்ளதாகவும், இதன் மூலம் வர்த்தகச் செயற்பாடுகள் சுமூகமாக இருக்கும் எனவும் தூதுவர் விக்டர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...