எங்களுக்கு இழப்பீடு வேண்டாம்: சர்வதேச விசாரணை தேவை!

Date:

வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கம் இன்று, ஒக்டோபர் 17 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

காணாமல் போனோர் அலுவலகம் மூலம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையை தாங்கள் நிராகரிப்பதாகவும், அவர்களின் குறைகள் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை, ஒக்டோபர் 11ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது, அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, மேலதிகமாக காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 100,000. வழங்க குறிப்பிட்டிருந்தார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...