இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

நாட்டில் இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ரிட்ஜ்வே  சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை நிலைமை காரணமாக சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சா பரவல்  அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இருமல், வாந்தி, காய்ச்சல் உள்ளிட்ட சில நோய் அறிகுறிகளுக்கமைய சிறுவர்களை பரிசோதனை செய்து பார்த்ததில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த வைரஸ் மீண்டும் சமூகத்தில் பரவ ஆரம்பித்துள்ளது. ஆகவே குழந்தைகள் சிறுவர்களை பாடசாலை, பாலர் பாடசாலைகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளவும் தொற்றுபரவாமல் இருக்கவும் பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

முக கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இன்புளுவன்சா வைரஸிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

புயல் எச்சரிக்கை: நிலவும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று தொடரும்.

“டிட்வா” சூறாவளி மட்டக்களப்பிலிருந்து தென்மேற்கே சுமார் 20 கி.மீ தொலைவில் அட்சரேகை...

நாளைய தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை

நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை...

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி...

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...