இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

நாட்டில் இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ரிட்ஜ்வே  சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை நிலைமை காரணமாக சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சா பரவல்  அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இருமல், வாந்தி, காய்ச்சல் உள்ளிட்ட சில நோய் அறிகுறிகளுக்கமைய சிறுவர்களை பரிசோதனை செய்து பார்த்ததில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த வைரஸ் மீண்டும் சமூகத்தில் பரவ ஆரம்பித்துள்ளது. ஆகவே குழந்தைகள் சிறுவர்களை பாடசாலை, பாலர் பாடசாலைகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளவும் தொற்றுபரவாமல் இருக்கவும் பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

முக கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இன்புளுவன்சா வைரஸிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...